- முகாமைத்துவ பயிற்சி முகாம்
- ராஜபாளையம்
- தமிழ்நாடு அரசு குடிநீர் மற்றும் வடிகாலமைப்பு வாரியத் தொடர்பாடல்
- திறன் கட்டிட பிரிவு
- துப்புரவு முகாமைத்துவ பயிற்சி முகாம்
- தின மலர்
ராஜபாளையம், ஜூலை 14: ராஜபாளையத்தில் தமிழ்நாடு அரசு குடிநீர் வடிகால் வாரியம் தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு, ஜல்ஜீவன் மிஷின் சார்பில் கிராம குடிநீர் மற்றும் சுகாதாரம் மேலாண்மை உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட நிர்வாக பொறியாளர் கென்னடி, உதவி நிர்வாக பொறியாளர் மணி ஆகியோர் தலைமை வகித்தனர். ராஜபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தகுமார், ரவி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இளநிலை நீர் பகுப்பாய்வாளர் வினோத்குமார் கலந்து கொண்டார். இதில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தண்ணீர் தரம், தண்ணீர் பாதுகாப்பு, தண்ணீர் சேகரிப்பு, சுத்தமான குடிநீர் மற்றும் வேதியியல் பாக்டீரியாக்கள் சம்பந்தப்பட்ட ரசாயனங்களை எவ்வாறு கண்டறிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. வெங்கடேசன், விமலா, சுதா, ராக்கம்மாள், தேவி, நந்தினி, பாலமுருகன் நதிக்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
The post ராஜபாளையத்தில் சுகாதார மேலாண்மை பயிற்சி முகாம் appeared first on Dinakaran.